தைப்பூசம் 2024

இம்மாதம் 24ஆம் தேதி களைகட்டிய தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற ஏராளமான தொண்டூழியர்கள் அருந்தொண்டாற்றினர்.
தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் பல வேண்டுதல்களுக்காகவும் நன்றிக் கடனாகவும் காவடி எடுப்பது, பால் குடம் எடுப்பது, ரதம் சுமப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம்.
தைப்பூசம் சிங்கப்பூரின் பல்லின பலசமய கலாசாரத்தைப் பறைசாற்றும் தனித்துவமான ஓர் அடையாளம் என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ.
கடந்த 14 ஆண்டுகளாகக் காவடி எடுக்கும் பால் சிங்கிற்கு உறுதுணையாக இருந்துள்ளார் அவரின் பால்ய நண்பர் லயனல் டான், 35. பால் சிங்கின் மூன்றடுக்குக் காவடியை ஆண்டுதோறும் கட்டுவது இவரின் வழக்கமாகிவிட்டது.